உலக நாடுகளை மிரள வைக்கும் பாகிஸ்தானின் திட்டம் .. வட்டியில்லாமல் கடன் வழங்கும் வங்கிகள்!
பாகிஸ்தான் அரசு அங்குள்ள வங்கிகளில் வட்டியில்லா கடன்களை பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை மிரள வைக்கும் வகையில் உள்ளது.
வட்டியில்லா கடன்:
உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை அனைவருக்கும் கவலையை அளித்து வருகிறது. இதனால் அரசுகள் நாட்டின் வருவாயை அதிகரிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மத்திய வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகிறது. இதனால் வருவாய் அதிகரிக்கும் என்பதால், எதிர்ப்புகள் எதுவும் கிளம்பவில்லை. இந்நிலையில் இஸ்லாமிய மக்களை அதிகம் கொண்டிருக்கும் பாகிஸ்தான் நாட்டில், ஷரியத் சட்டத்தின் படி, வட்டி வாங்கும் நடைமுறை தடை செய்யப்பட்டதாகும்.
நாளையும் (நவம்பர் 12) இந்த மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு..!
Exams Daily Mobile App Download
இதனால், பாகிஸ்தானின் மத்திய அரசு வங்கிகளில் மக்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் 2027ம் ஆண்டிற்குள் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு வட்டியில்லா கடன்களை வழங்குவதன் மூலம் நுகர்வினை அதிகரித்து, நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வங்கியின் நிலை கேள்விக்குறியாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.