நாளையும் (நவம்பர் 12) இந்த மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு..!

0
நாளையும் (நவம்பர் 12) இந்த மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் கவனத்திற்கு..!
நாளையும் (நவம்பர் 12) இந்த மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை - மாணவர்கள் கவனத்திற்கு..!
நாளையும் (நவம்பர் 12) இந்த மாவட்டங்களில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்கள் கவனத்திற்கு..!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழை எச்சரிக்கையால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் நேற்று முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. அதனால் இன்று (நவ. 11) தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு தொகுப்பு.. ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி, சர்க்கரையுடன் ரொக்க பரிசு – சூப்பர் தகவல்!!

Exams Daily Mobile App Download

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை சுற்றி உள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த வகையில் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12 ஆம் தேதியும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!