தேர்தலையொட்டி ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை – அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் நாளை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை என கோவா அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுமுறை:
கர்நாடக மாநிலத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கோவா மாநிலம் முழுவதும் நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் என அனைவருக்கும் நாளை ஊதியத்துடன் விடுமுறை என கோவா அரசு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு கோவா மாநிலத்தில் உள்ள ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பது மிகவும் ஆபத்தான முடிவு என எதிர்க்கட்சியினர் தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வேலையெல்லாம் இப்பவே முடிச்சிடுங்க மக்களே – நாளை (மே.10) இந்த பகுதியில் கரண்ட் இருக்காது!
மேலும், கோவா மாநில தொழில்துறை சங்கத் தலைவரும் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு கோவா மாநிலத்தின் முதல்வர் கோவா மாநிலத்தில் உள்ள கர்நாடக மாநில பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்பு கோவா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கர்நாடகா மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த காரணத்தினால் மட்டுமே கோவா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் அனைத்திற்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.