600 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த ஓயோ நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!
உலகளவில் பல நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் ஓயோ நிறுவனம் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு குழுக்களில் பணியாற்றும் 600 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்
உலகளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஓயோ தனது தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு குழுக்கள் முழுவதும் பணியாற்றும் 600 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விற்பனை பிரிவில் புதிதாக 250 நிர்வாகிகளை பணியமர்த்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணமாக தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுக்களை ஒன்றிணைக்க இந்த நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் – இந்த மாவட்ட மக்களே அலர்ட்!
Exams Daily Mobile App Download
மேலும் நிறுவனத்திற்காக வேலை செய்வோருக்கு தங்களால் முடிந்த உதவிகளை நிறுவனம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. OYO குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த ஒவ்வொரு ஊழியர்களின் திறமையை ஆதரிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அது மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் அந்த ஊழியர்களின் தேவை ஏற்பட்டால் மீண்டும் அவர்களை பணிக்கு வர நடவடிக்கை எடுப்போம் என ஓயோ நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.