இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் – இந்த மாவட்ட மக்களே அலர்ட்!
தமிழகத்தில் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகம் முழுவதும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக இந்த வாரத்தின் தொடக்கம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் தஞ்சாவூர், நாகப்பட்டினம், சிவகங்கை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதை தவிர டிசம்பர் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, டிசம்பர் 7ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசின் அங்கீகாரம் பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!
Exams Daily Mobile App Download
மேலும், நாளை முதல் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று டிசம்பர் 7ம் தேதி வரை வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் மீனவர்கள் நாளை முதல் 7ம் தேதி வரை குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.