வெளிநாடுகளில் மாதம் ரூ.2.5 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்புகள் – நிறுவன இயக்குனர் அறிவிப்பு!
வெளிநாடுகளில் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு பணிகள்:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். சிறு குறு வணிக நிறுவனங்களில் ஏற்பட்ட பொருளாதார சரிவால் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். அதனால் தங்கள் ஊழியர்களுக்கு பணி வழங்கி ஊதியம் தர இயலவில்லை. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பின்தங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த நிலையில் வெளி நாடுகளில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. பணிகள் மற்றும் அதன் மாத ஊதியம் குறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பிரிட்டனில் உள்ள மருத்துவமனைகளில் 300 முதல் 500 செவிலியர் பணியிடங்கள் உள்ளது. இதற்கு டிப்ளமா மற்றும் பட்டதாரி ஆண், பெண்கள் தேவை. மாத ஊதியம், 2 லட்சம் முதல் 2.50 லட்சம் வழங்கப்படும். மேலும் ஜி.சி.சி., ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களுக்கு, குவைத் நாட்டில் பணிபுரிலாம் இவர்களுக்கு வயது 30 முதல் 45 வரை இருக்க வேண்டும் மாத சம்பளம் 27,000 முதல் 34,500 ரூபாய் வரை வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் அரபு உணவு வகைகள் சமைக்க, ஆண் சமையல்காரர்கள் தேவை இவர்களுக்கு மாத ஊதியம் 37,000 ரூபாய் ஆகும். அதனை தொடர்ந்து 30 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண் பணியாளர்கள் தேவை. இவர்களுக்கு மாத சம்பளம் 26,640 முதல் 32,000 ரூபாய் வரை வழங்கப்படும். ஓமன் நாட்டில் பணிபுரிய, ‘மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ., ‘பிட்டர்’ தேர்ச்சி பெற்றவர்கள் தேவை. மாதம் 29,000 ரூபாய் வழங்கப்படும். உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு ஆகியவை தனியாக வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.