தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அம்முடிவை ஒத்திவைப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலையை தடுக்கும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. அரசின் இந்த நடவடிக்கைகளின் விளைவால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே தன்னிச்சையாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது.

தமிழக அரசில் ரூ.50,400/- ஊதியத்தில் உதவியாளர் வேலை – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் கடந்த மாதம் முதலே உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த தொடங்கின. தமிழகத்திலும் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை விரைந்து திறக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டது. அதன் பேரில் கருத்து கேட்பு கூட்டங்கள், ஆலோசனைகளுக்கு பின்னர் செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கல்லூரிகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பேராசிரியர்கள் நேரடியாக வருகை புரிய அறிவுறுத்தப்பட்டது.

பிரபல தமிழ் எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா.விருது – ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிப்பு!

மேலும் அனைத்து ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே மருத்துவ கல்லூரி ஒன்றில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சில மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் சற்று அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு முடிவை ஒத்திவைப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!