45 நாள் நிகழ்ச்சியாக OTT Bigg Boss? போட்டியாளர்கள் யார் தெரியுமா? ரசிகர்களுக்கு ஜாக்பாட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 2 வாரங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் வருகிற ஜனவரி மாதம் முதல் “பிக்பாஸ் தமிழ் ஓடிடி” தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
தமிழ் சின்னத்திரையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஒரு சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். நான்கு சீசன்களில் பல போட்டியாளர்கள் விளையாடிய நிலையில் மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் இன்னும் பேசப்பட்டு தான் வருகின்றனர். இந்நிலையில் ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் பலர் வாரந்தோறும் எலிமினேட் செய்யப்பட்டு தற்போது 8 போட்டியாளர்கள் இறுதி சுற்றிற்காக விளையாடி வருகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை விஜே சித்ராவுக்காக அவரது ரசிகர் செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!
இன்னும் 3 வாரங்களில் இறுதிச்சுற்று வர இருக்கிறது. இந்நிலையில் “பிக்பாஸ் தமிழ் ஓடிடி” நிகழ்ச்சி வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறதாம். தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி போல இல்லாமல் இதுவரை ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருந்து நன்றாக விளையாடிய போட்டியாளர்கள் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பார்களாம். மேலும் இந்த போட்டியில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு கிளம்பும் எதிர்ப்பு – அதிருப்தி தெரிவிக்கும் மக்கள்!
இந்த நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பாகும் எனவும் போட்டியாளர்கள் 50 நாட்கள் மட்டுமே வீட்டிற்குள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் சீசனில் மக்கள் மனம் கவர்ந்த ஓவியா வர வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாக இருக்கிறதா இல்லை எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பாகுமா என இன்னும் முடிவு செய்யவில்லையாம். இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு அல்லது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.