மேல்நிலை பொதுத்தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – அரசுத் தேர்வுகள் இயக்ககம்!
தனித்தேர்வர்களுக்கு அசல் சான்றிதழ் பெறுவதற்கான இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் சான்றிதழ் பெறுவதற்கு விவரங்கள் அடங்கிய கடிதத்தை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அசல் சான்றிதழ்:
தமிழகத்தில் மார்ச் 2014 முதல் செப். 2018 வரை மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய பல தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தோ்வா்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் அனுப்பி பட்டுவாடா ஆகாமலும் திரும்பி வந்து, திருச்சி அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்ளும் ஆர்வம் குறைந்து வருவதால் அதனை உரியவர்களிடம் சேர்க்கும் பொருட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வட்டார கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தல்!
மேலும் சென்னை அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாள்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எனவே அசல் மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் உரிய நேரத்தில் பெற்றுக் கொள்ளாவிட்டால் கழிவுத்தாள்களாக மாற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே அசல் சான்றிதழ் பெற விரும்புபவர்கள் வெள்ளை தாளில் விபரங்களை நிரப்பி டிசம்பர் 31ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 5,336 பேருக்கு கேங்மேன் வேலைவாய்ப்பு – ஆணை வழங்க கோரிக்கை!
தனித்தோ்வா்கள் ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தைக் குறிப்பிட்டு தோ்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தோ்வெழுதிய பாடம் மற்றும் தோ்வு மையத்தின் பெயா் ஆகியவற்றை குறிப்பிட்டு ரூ.45-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரி எழுதிய உறையை இணைத்து, உதவி இயக்குநா், அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகம், 16-1, வில்லியம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி என்ற முகவரிக்கு அனுப்புமாறு அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.