தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை குறித்த அவசர சட்டம் – ஆளுநர் ஒப்புதல்!
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய கோரிக்கைகள் வலுத்து வந்தது. இதனையடுத்து அவசர சட்டம் பிறப்பிக்கபட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஒப்புதல் அளித்த நிலையில் அடுத்ததாக ஆளுநரிடம் அரசு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது இது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மி:
இந்தியாவில் அதிக அளவில் மக்கள் ஆன்லைன் இணைய சூதாட்ட விளையாட்டான ரம்மிக்கு அடிமையாகிவிட்டனர். தற்போது ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சிலர் 24 மணி நேரமும் இதை வேலையாக செய்து வருகின்றனர். இந்த விளையாட்டின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற என்ற ஆசையில் மக்கள் முதலீடு செய்து ஏமாந்து விடுகின்றனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலியான விளம்பரங்களை நம்பி மக்கள் மொத்த பணத்தையும் முதலீடு செய்கின்றனர்.
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான வட்டி பணம் வரலையா! இது தான் காரணம்!
அதனை மீட்க முடியாமல் கடன் வாங்கி இறுதியில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிலும் சிலர் தற்கொலை செய்து விடுகின்றனர். அந்த அளவிற்கு இந்த விளையாட்டு பேராபத்தாக உள்ளது. அதனால் தமிழகத்தில் இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வது குறித்து கலந்தாலோசிக்க பட்டது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் வல்லுநர் குழுவிடம் கருத்துக்கள் பெறப்பட்டு புதிய சட்டம் கொண்டு வருவதற்கான மசோதா உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில், அடுத்தாக ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1ம் தேதி ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்