PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான வட்டி பணம் வரலையா! இது தான் காரணம்!

0
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான வட்டி பணம் வரலையா! இது தான் காரணம்!
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - உங்களுக்கான வட்டி பணம் வரலையா! இது தான் காரணம்!
PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான வட்டி பணம் வரலையா! இது தான் காரணம்!

இந்தியாவில் அனைத்து ஊழியர்களுக்கும் EPF நிறுவனம் ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் சில EPF சந்தாதாரர்களுக்கு PF தொகைக்கான வட்டி விகிதம் வழங்கப்படவில்லை என புகார் எழுப்புகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக நிதியமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

PF வட்டித்தொகை

இந்தியாவில் தொழிலாளர் அனைவரும் தங்களின் முதிர்வு காலத்தில் ஓய்வூதிய பலன்களை பெற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ் சேமித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களின் மாதாந்திர சம்பளத்தில் சிறு சிறு தொகையாக செலுத்தி சேமித்து வருகின்றனர். மேலும் பணிபுரியும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அவரின் PF கணக்கின் கீழ் செலுத்தும். அதன் பின்பு ஊழியர் ஓய்வு பெறும் போது இதில் சேமிக்கப்படும் தொகையானது வட்டி விகிதத்துடன் கணக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வட்டி விகிதம் செலுத்தப்படுகிறது. இந்த நிலையில் பலருக்கு PF கணக்கில் வட்டி தொகையானது செலுத்தப்படவில்லை என புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேமித்துள்ள தொகைக்கு வட்டி விகிதம் செலுத்தப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் இது போன்ற சிறு தவறுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – நாளை(அக்.08) குறைதீர் முகாம்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இதற்காக நிதியமைச்சகம் பதிலளித்தாவது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ் சேமிக்கும் எந்தவொரு சந்தாதாரருக்கும் வட்டி இழப்பு என்பது ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது அனைத்து சந்தாதாரருக்கும் வட்டி விகிதம் முறையாக செலுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து EPFO-இல் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சாப்ட்வேர் அப்கிரேட் செய்யப்பட்டதன் காரணமாக உங்களுக்கான PF அறிக்கையில் வட்டித் தொகையானது பிரதிபலிக்கப்படவில்லை எனவும் ஓய்வு பெறும் அனைவருக்கும் வட்டி விகிதத்துடன் சேர்த்து PF தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!