தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை!!
தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி இது தொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
ஊக்க ஊதியம்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது குறிப்பிட்ட கல்வி தகுதிக்கு மேல் கல்வி தகுதி உடைய ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊக்க ஊதியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. அதாவது அரசு ஆசிரியராக பணியாற்றும்போது உயர் கல்வி படிப்பதற்கு தாங்கள் பணியாற்றும் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இவ்வாறு அனுமதி பெற்று படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அத்துடன் அனுமதி பெறாமல் படித்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை பரிந்துரைக்கப்படாது. அதன்படி இதற்கான உத்தரவு கடந்த 2020 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையால் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். அதனால் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மீண்டும் இந்த ஊக்க தொகையை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
தொடர்ந்து சரியும் ஆபரணதங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் பெண்கள்… இன்றைய விலை நிலவரம் இதோ!
இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி இது தொடர்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் முறைப்படி ஊக்க ஊதியம் பெற தகுதியானவர்களின் விவரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையில் விரைவில் ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைக்கு வருவதற்கு முன்பே படித்திருந்தால். அட்டெஸ்ட்ரேஷன் மட்டும் போதும். அனுமதி தேவையில்லை.