தொடர்ந்து சரியும் ஆபரணதங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் பெண்கள்… இன்றைய விலை நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்துள்ள நிலையில் இன்று தங்கத்தின் விலை சரிந்துள்ளது நகைப்பிரியர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தங்கம் விலை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வந்தது. இதனால் தங்க வியாபாரிகளும் தங்க நகைகளை விரும்பி அணிபவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்தியாவை பொறுத்த மட்டில் தென் மாநிலங்களில் தங்க நகைகளின் பயன்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இத்தகைய சூழலில் தங்கத்தின் விலையானது தினதோறும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது தங்க அணிகலண்கள் வாங்க வேண்டும் என்று முயற்சித்தவர்கள் தங்கத்தின் விலையை அறிந்து நகைகள் வாங்குவதில் தயக்கம் காட்டி வந்தனர்.
SSC JE தேர்வர்கள் கவனத்திற்கு – PAPER II தேர்வு தேதி வெளியீடு!!
இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது இன்றைய நிலவரப்படி எதிர்பாராத விதமாக சற்று குறைந்துள்ளது. அதாவது இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40 குறைந்து ரூ. 42,320-க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5 குறைந்து ரூ. 5,290-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து ரூ.73.50-க்கு, விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.