தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கட்டுரைப் போட்டி!
தமிழகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப்போட்டி நடைபெற உள்ளது.
கட்டுரைப்போட்டி:
தமிழகத்தின் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு தலைவரின் தியாகங்கள் குறித்து நினைவுபடுத்தும் வகையில் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் கட்டுரைப்போட்டிகள், பேச்சு போட்டிகள், ஓவியம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2 ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து கல்லூரி, பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு பேச்சு போட்டிகள் நடத்தபட்டது.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!
அதனை தொடர்ந்து தற்போது அக்டோபர் 15ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்து விண்வெளித்துறையில் மிக சிறந்த பல சாதனைகளை படைத்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளன்று உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் சார்பில் கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்.16ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ‘விண்வெளித் துறையில் ஏவுகணை நாயகன்’ என்ற தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எனது பார்வையில் கலாமின் கட்டளைகள்’ என்ற தலைப்பிலும், 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அக்னி சிறகுகள் ஒரு பார்வை’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு ‘அப்துல்கலாம் விரும்பிய கனவு இந்தியா’ என்ற தலைப்பிலும் இணைய வழியில் கட்டுரைப்போட்டி நடைபெற உள்ளது. கட்டுரைகளை மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நேரடியாகவே அனுப்பலாம் இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு 8778201926 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.