EPFO பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் நாமினி நியமனம்! வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்கள் இறக்க நேர்ந்தால் வருங்காலத்தில் பிஎப் பணம் பெற ஒரு நாமினியை நியமனம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு செய்யும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
பிஎப் நாமினி:
இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அவை வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படுகிறது. பிஎப் தொகையானது அவர்களின் வருங்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தமிழகத்தில் அக்.16ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
2020 – 2021 நிதியாண்டில் PF வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி தொகை விரைவில் பிஎப் கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிஎப் பயனாளர் தங்களுக்கான நாமினியை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்தது. சம்பளம் பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பளதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக நியமனம் செய்ய வேண்டும். அப்போது தான் சம்பளதாரர் இறந்த பிறகு பிஎப் தொகை எளிதில் கிடைக்கும் தற்போது ஆன்லைன் மூலம் நாமினியை தேர்வு நியமனம் செய்யும் புதிய வருங்கால வைப்பு நிதி வெளியிட்டுள்ளது.
- முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்திற்கு செல்லவும்.
- அதில் வரும் விருப்பங்களில் சேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்த கட்டமாக ‘ஊழியர்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் UAN/ ஆன்லைன் சேவை (OCS/ OTP) என்பதைக் கிளிக் செய்து உங்கள் பாஸ்வார்டை பதிவிட்டு உள் நுழைய வேண்டும்.
- அடுத்ததாக மேலாண்மை என்ற பக்கத்திற்கு சென்று இ-நாமினேஷன் என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
- அதில் உங்களின் நாமினி குறித்த விவரங்களை பதிவிட்டு ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்யவும். இந்த நடைமுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம்.
- பிறகு உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும் அதை பதிவிட்டு நாமினியை உறுதி செய்ய வேண்டும்.