தமிழகத்தில் அக்.16ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கமுதியில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மின்தடை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பொது மக்கள் பார்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி பதவி ஏற்றுள்ளார். தமிழகத்தில் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் துணைமின் நிலையங்களில் பழுது ஏற்படுவதை தடுக்கும் விதமாக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய பராமரிப்பு பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் உள்ள துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது துணைமின் நிலையத்தின் கீழ் செயல்படும் அனைத்து பகுதிகளுக்கும் மின்தடை அறிவிக்கப்படும்.
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – DA 31% அதிகரிப்பினால் வரவுள்ள தொகை!
இத்தகைய மின் பராமரிப்பு பணிகளானது மாதம் ஒருமுறை மேற்கொள்ளப்படும். இந்நிலையில் கோட்டைமேடு துணைமின் நிலையத்தில் இன்று அக்-13 புதன் கிழமை மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் கமுதியை சுற்றியுள்ள பசும்பொன், கமுதி நகர், கண்ணார்பட்டி, கோட்டைமேடு, தலவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, அபிராமம், பார்த்திபனுர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை அறிவித்து மின்வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பில் புதிய திருப்பம் – முக்கிய விபரங்கள் சேகரிப்பு!
ஆனால் தற்போது இன்று அறிவிக்கப்பட்ட மின்தடையை சனிக்கிழமை அதாவது, அக்-16 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மின்தடை செய்யாமல் அக்-16 ம் தேதி கோட்டைமேடை சுற்றி அமைந்துள்ள மேலே பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று கமுதி மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் தி.சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்தடைக்கு ஏற்ப மக்கள் தங்களது பணிகளை பார்த்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.