தமிழக மக்களுக்கு வார்னிங்.. இன்றும் நாளையும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – 2 நாட்களுக்கு கனமழை!
தமிழகத்தில் தொடர்ந்து சில வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில், தற்போது ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனமழை:
தமிழகம் முழுவதும் சமீப நாட்களாக அதிக மழை பெய்து வருகிறது. அதிலும், கடந்த அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பருவமழைக்கு முன்னதாக அதிக மழை பொழிவு இருந்த நிலையில், பருவமழை தொடங்கி விட்டால் எதிர்பாராத அளவு மழை பொழிவு இருக்கும் என்று நிபுணர்கள் முன்னதாகவே எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், தமிழகத்திற்கு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரு தினங்களும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர பருவமழை சூடு பிடித்து தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாகவும், தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.