பொதுத்துறை வங்கிகளில் விருப்ப ஓய்வு திட்டம் – மத்திய அரசு தகவல்!
பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்பத்தின் பேரில் ஓய்வு வழங்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது.
விருப்ப ஓய்வு திட்டம்:
தற்போது அமலில் உள்ள விதிகளின்படி அரசு பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றிய பிறகு அவர்களுக்கு ஓய்வு வழங்கப்படும். மேலும் அதற்கான ஓய்வூதிய தொகை மாதந்தோறும் வழங்கப்படும். தற்போது இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனங்களில் ஊழியர்களை குறைக்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு – பாமக நிறுவனர் கண்டனம்!
தனது பணிக்காலம் முடிவதற்குள் ஓய்வு தேவைப்பட்டால் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை ஊழியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அதிக அளவிலானோர் விரும்பி வெளியேறும் வகையில் இந்த திட்டம் இருக்கும். மேலும் குறைவான ஊழியர்கள் இருத்தால் மட்டுமே நிர்வாகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும் என நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிதி ஆயோக் அமைப்பு இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதன் பேரில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் விருப்ப ஓய்வுக்கான பரிந்துரையை ஏர் இந்தியா மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்களுக்கும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. பொதுத்துறை வங்கிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் பணி தொடங்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது அறிமுகமாக இருக்கும் விருப்ப ஓய்வு திட்டம் ஊழியர்கள் தானாக பணியில் இருந்து வெளியேறும் வகையில் இருக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.