தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – கொரோனா தடுப்பு பணி!
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அப்பணிகளில் ஈடுபட ஆசிரியர்கள் மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள்
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருடன் தற்போது அரசு பள்ளி ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின் படி, கொரோனா 2 ஆம் அலை காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை கொடுக்கவும், வீடுகள் தோறும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை கண்டறிவது குறித்த தடுப்பு பணிகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர்.
பொதுத்துறை வங்கிகளில் விருப்ப ஓய்வு திட்டம் – மத்திய அரசு தகவல்!
அதன் படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியின் படி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி துறையினர் இந்த தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பல மாவட்டங்களில், ஆட்சியாளர் ஒதுக்கும் இடங்களுக்கு சென்று கொரோனா பணிகளை மேற்கொள்ள முடியாது என பல ஆசிரியர்கள் மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து பள்ளிகல்வி செயலகத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘கொரோனா தடுப்பு பணிகளுக்கு செல்ல மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அறிவுறுத்தினால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது. அப்படி ஆட்சியரின் உத்தரவை மீறுபவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டிருந்தது.