தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, 100% ஆசிரியர்கள் வருகை – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் மீண்டும் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏதும் நடைபெறுவதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வாட்ஸ்ஆப் வீடியோக்கள் வாயிலாகப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. பள்ளியில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் மற்றும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளினால் பல மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும், பலர் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளில் உள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டது. அதேபோல், தமிழகத்திலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. முன்னதாக முதல்வரின் உத்தரவுப்படி, ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்தனர். தற்போது ஜூலை 19 ம் தேதி முதல் 10 மற்றும் 11ம்வகுப்பு ஆசிரியர்கள் அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 41,383 பேருக்கு கொரோனா – 507 பேர் பலி!
10 மற்றும் 11ம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்கவும், தினமும், பாட குறிப்புகள், செயல்திட்டம் போன்றவற்றை முடித்து தலைமை ஆசிரியரிடம் கையெழுத்து வாங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேரடி வகுப்புகளை தொடங்குவது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டு உள்ளது. இதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.