நாடு முழுவதும் ஒரே நாளில் 41,383 பேருக்கு கொரோனா – 507 பேர் பலி!

0
நாடு முழுவதும் ஒரே நாளில் 41,383 பேருக்கு கொரோனா - 507 பேர் பலி!
நாடு முழுவதும் ஒரே நாளில் 41,383 பேருக்கு கொரோனா - 507 பேர் பலி!
நாடு முழுவதும் ஒரே நாளில் 41,383 பேருக்கு கொரோனா – 507 பேர் பலி!

இந்தியாவில் கொரோனா பரவல் பாதிப்பானது குறைந்து வரும் பட்சத்தில் கடந்த சில வாரங்களாக புதிய பாதிப்புகள் 40 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலி எண்ணிக்கை சற்றே வீழ்ச்சி கண்டு நேற்று (ஜூலை 21) ஒரு நாளில் 507 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பேரலை தாக்கமானது இன்று வரை நீடித்து வருகிறது. இதற்கிடையில் சற்று சரிய துவங்கிய கொரோனா தாக்கமானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 ஆம் அலையாக உருவெடுத்து பல இன்னல்களை ஏற்படுத்தி வருகிறது. எனினும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சியுடன் தடுப்பூசி போடும் பணிகள் மூலம் கொரோனா தாக்கமானது மீண்டுமாக குறைய துவங்கியுள்ளது. இருப்பினும் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் என்ற வீதத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் இன்றளவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஜூலை 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – ஆந்திர மாநில அரசு அறிவிப்பு!

இதற்கு முன்னதாக கடந்த சில வாரங்களாக புதிய பாதிப்புகளில் வீழ்ச்சி கண்டு வந்த இந்தியா, சில நாட்களாக 40 ஆயிரம் என்ற அளவில் கொரோனா பாதிப்புகளை பதிவு செய்கிறது. இது கொரோனா 3 ஆம் அலைக்கான ஆரம்பம் என்று சுகாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும் பொது மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள், இறப்புகள், சிகிச்சை, குணமடைந்தோர் விகிதம் உள்ளிட்ட விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

1 முதல் 10ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர்!

அதன் படி, கடந்த 24 மணி நேரத்தில் 41,383 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று (ஜூலை 21) ஒரு நாளில் 507 இறப்புகள் என்ற அடிப்படையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே குணமடைந்தோர் எண்ணிக்கை 38,652 ஆக உள்ளதால், மொத்த குணமடைந்தோர் விகிதம் 3,04,29,339 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 4,09,394 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இதுவரை 41,78,51,151 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!