ஜூலை 30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – ஆந்திர மாநில அரசு அறிவிப்பு!
ஆந்திராவில் கொரோனா கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டுள்ள இரவு நேர ஊரடங்கு உத்தரவானது ஜூலை 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர மற்ற நேரங்களில் பிரிவு 144 ன் கீழ் மாநிலம் முழுவதும் தடை உத்தரவு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை பரவல் கட்டுப்பாடுகளாக ஆந்திர பிரதேச மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆந்திராவில் கொரோனா நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், புதிய பதிப்புகள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவை ஜூலை 30 ஆம் தேதி வரை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி தபால் அலுவலகங்களில் பெறலாம்!
அதன் படி தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்’ என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு இல்லாத நேரங்களில் மாநிலம் முழுவதும் 144 பிரிவின் கீழ் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தவிர தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 10ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 2வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அமைச்சர்!
இது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்ட கொரோனா மறு ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கூட்டத்தில், தடுப்பூசி போடும் பணியில் அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட முதல்வர் மாநிலம் முழுவதும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்பு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,412 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 19 இறப்புகள் பதிவாகியுள்ளன.