செப்.1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து டெல்லி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடிய நிலையில் நோய் பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தை தவிர பிற மாநிலங்களில் நோய் பரவும் விகிதம் குறைவாக இருந்ததால் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனை தொடர்ந்து டெல்லி அரசு செப்.1 முதல் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
- வகுப்புகளில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். காலை, மாலை என நடத்தப்படும் வகுப்புகளுக்கு இடையே 1 மணி நேர இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களது புத்தகங்கள், உணவு பொருட்கள் முதலியனவற்றை மற்ற மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது.
- உணவு இடைவேளையின் போது மாணவர்கள் திறந்தவெளியில் அமர்த்தப்பட்ட வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது முக்கியமாகும்.
TN Job “FB Group” Join Now
- மாற்று இருக்கைகள் தயாராக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் பள்ளிக்கு வர பெற்றோர்களின் அனுமதி கட்டாயமாக தேவை.
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- பள்ளிகளில் தனிமைப்படுத்தப்படும் அறை கட்டாயமாக இருக்க வேண்டும்.
பள்ளி வழக்கத்தினை தொடர்ந்து சுத்தம் செய்வது மற்றும் கழிவறையில் சோப்பு, தண்ணீர் முதலியன கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். மேலும் சானிடைசர், உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, மாஸ்க் போன்றவை இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.