TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – 2023ல் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்குமா?
TNPSC தேர்வு வாரியம் அடுத்த ஆண்டு நடத்த இருக்கும் தேர்வுகள் குறித்த அட்டவணையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள போதிலும் வரும் நாட்களில் அவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
ஒவ்வொரு ஆண்டும் TNPSC தேர்வு வாரியம், குரூப் 1,2,2ஏ, 4 மற்றும் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள், தேர்வுகள், தேர்வு முடிவுகள் ஆகியவை எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரங்களை ஆண்டு அட்டவணையாக தயார் செய்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் அடுத்த ஆண்டுக்கான (2023) அட்டவணையை TNPSC தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதில் தமிழக அரசின் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் பணியிடங்கள் சற்று குறைவாக இருந்தாலும் இது வெறும் முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணை தான்.
வரும் காலத்தில் கூடுதல் பணியிடங்கள் உருவாகும் பொழுது அட்டவணையில் பணியிடங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே போட்டித்தேர்வர்கள் காலிப்பணியிடங்கள் குறித்த பயமின்றி தேர்வுகளுக்கு ஆயத்தம் ஆகலாம்.