தமிழக அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு – தீபாவளி பண்டிகை எதிரொலி!
அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற மாநகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு பயணிக்க விரும்புபவர்களுக்கு ஏதுவாக அரசு பேருந்துகளில் இன்று (அக்டோபர் 4) முதல் முன்பதிவு துவங்குகிறது.
முன்பதிவு துவக்கம்
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு பயணிக்க விரும்பும் நபர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டும் வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கமான பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதற்காக அரசு பேருந்துகளில் இன்று (அக்டோபர் 4) முதல் முன்பதிவு துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு – இனி பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்! அரசு ஏற்பாடு!
அதாவது இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 4ம் தேதியன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை வியாழக்கிழமை தினத்தன்று வருவதால் அதனை தொடர்ந்து வார இறுதி நாட்களும் இருப்பதால், நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்கும். அதனால் சென்னை மற்றும் பிற மாநகரங்களில் வேலை செய்து வரும் நபர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வசதியாக சிறப்பு போக்குவரத்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – 31% DA அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!
அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதியன்று பயணிப்பதற்காக, தமிழக அரசு பேருந்துகளில் இன்று (அக்டோபர் 4) முதல் முன்பதிவுகள் துவங்குகிறது. அதன் படி தமிழக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சொகுசு பேருந்துகள், படுக்கை வசதி உடைய பேருந்துகள் மற்றும் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.