தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு – இனி பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம்! அரசு ஏற்பாடு!
தமிழகத்தில் அனைத்து மாணவா்களும் தங்களது பள்ளிகள் மூலமாக வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு:
தமிழகத்தில் அரசு வேலைகளில் சேர அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியம். அந்த பதிவை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். சமீபத்தில் அரசு கடந்த 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் அளித்தது. தற்போது வேலைவாய்ப்பு பதிவு மிக எளிதாக மாறி விட்டது. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். மேலும் கல்வி தகுதியையும் பதிவு செய்யலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – 31% DA அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!
மேலும் தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் வேலைவாய்ப்பு பதிவை பள்ளிகளிலேயே பதிவு செய்து விடுகின்றனர். அதன் பிறகு 12ம் வகுப்பு முடித்தவுடன் கல்வி தகுதிகளையும் பள்ளி நிர்வாகத்தின் பதிவு செய்கின்றனர். தற்போது 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் (04.10.2021) வழங்கப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு – முதலாமாண்டு மாணவர்கள் வருகை!
இதையடுத்து அக்டோபர் 4 முதல் 18ம் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் அவர்களின் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
Super
I need work