தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு – முதலாமாண்டு மாணவர்கள் வருகை!
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 4) முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் உற்சாகத்துடன் நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
கல்லூரிகள் திறப்பு
கடந்த மே மாதம் முதல் பேரலையாக உருவெடுத்த கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனிடையே மாநிலம் முழுவதும் மே மாதம் முதல் விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா புதிய பாதிப்புகள் விகிதம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் கல்வி நிறுவனங்களை மீண்டுமாக திறக்க அரசு அனுமதி அளித்தது.
தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் காலியிடங்கள்! – நிரந்தர பணியிடத்திற்கு பெண்கள் தேவை
அந்த வகையில் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், கல்லூரிகளில் 2 மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதே நேரத்தில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 லிருந்து 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட உள்ளது. இதில் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இதுவரை ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் – நாளை முதல் பள்ளிகளில் விநியோகம்!
இந்நிலையில் தமிழகம் முழுவதுமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2021-2022 ஆம் கல்வியாண்டில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று (அக்டோபர் 4) முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.