சென்னையில் ஸ்தம்பித்து நின்ற ஆன்லைன் டெலிவரி.. Swiggy ஊழியர்கள் திடீர் போராட்டம்!

0
சென்னையில் ஸ்தம்பித்து நின்ற ஆன்லைன் டெலிவரி.. Swiggy ஊழியர்கள் திடீர் போராட்டம்!
சென்னையில் ஸ்தம்பித்து நின்ற ஆன்லைன் டெலிவரி.. Swiggy ஊழியர்கள் திடீர் போராட்டம்!
சென்னையில் ஸ்தம்பித்து நின்ற ஆன்லைன் டெலிவரி.. Swiggy ஊழியர்கள் திடீர் போராட்டம்!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இயங்கி வரும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை என இன்று காலை முதல் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழியர்கள் போராட்டம்:

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அம்சமாக மக்கள் தங்களுடைய வீட்டில் இருந்தே உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் வசதி இருக்கிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் அதிக மக்கள் இந்த ஆன்லைன் உணவு டெலிவரி ஆப்களை பயன்படுத்துகின்றனர். இந்த தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதால் பல படித்த இளைஞர்களும் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இந்த உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ராயப்பேட்டை, தி நகர் உள்ளிட்ட 5 ஸ்விக்கி மண்டலங்களில் திடீரென ஸ்விக்கி விதிமுறைகள் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி இந்த குறிப்பிட்ட மண்டலங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணி நேரம் 16 மணி நேரமாகவும், அதற்கான வருமானமும் குறைவாக கொடுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக ஸ்விக்கி ஊழியர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

மேலும் இந்த விதிமுறைகளை மாற்ற சொல்லி ஸ்விக்கி ஊழியர்கள் இன்று அதிகாலையில் இருந்து போராட்டம் செய்து வருகின்றனர். ஏற்கனவே நேற்று முதல் போராட்டம் நடத்திய நிலையில் அது கைவிடப்பட்டது. அதனால் இன்று முதல் போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். தற்போது வேலை நேரம் அதிகரித்தாலும் ஏற்கனவே வாங்கிய வருமானத்தை விட குறைவாக கிடைப்பதாகவும், மேலும் வார ஊக்கத்தொகையையும் ஸ்விக்கி நிறுவனம் நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வந்த போலீசார் போராட்டத்தை கைவிட சொல்லியும், இது குறித்து நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என தெரிவித்தனர்.

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – செப். 22 வரை கால அவகாசம்!

Exams Daily Mobile App Download

போலீசார் வேண்டுகோளை ஏற்று நேற்று ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் ஸ்விக்கி நிறுவன ஊழியர்களுக்கு இன்னும் புதிய விதிமுறைகள் மாற்றப்படாமல் இருப்பதால் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 300+ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதால் ஆன்லைன் டெலிவரிகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 5 மண்டலங்களில் கொண்டு வரப்பட்ட விதிமுறை மாற்றம் மற்ற மண்டலங்களுக்கும் கொண்டு செல்லப்பட வாய்ப்பு உள்ளது என்ற தகவலால் மற்ற மண்டல ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!