எதிர்பாராத நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு.. பள்ளிகள் மூடல்.. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்!
அரசால் தற்போது அதிரடி அதிகரிக்கும் கோவிட் நோய் தொற்றை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரங்கள் இப்பதிவில் காணலாம்.
பள்ளிகள் மூடல்:
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் காதுகளில் அதிகம் கேட்ட ஒரு சொல் கொரோனா. தற்போது உலக நாடுகளில் இதன் தாக்கம் வலுவாக குறைந்துவிட்டது. சென்ற ஆண்டில் இந்தியாவில் கொரோனவால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு பொதுத்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது.
மாற்றப்பட்ட தேர்வு முறை.. ஆசிரியர் நியமனத்தில் இனி இது கட்டாயம் – முழு விவரங்கள் உள்ளே!
Exams Daily Mobile App Download
இதனால் ஷாங்காயின் கல்வி துறை ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திங்கட்கிழமை முதல் மூட உத்தரவிட்டுள்ளது. அந்த மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. ஜனவரி 1 அன்று வரும் புத்தாண்டு விடுமுறையின் போது சீனாவின் மக்கள் தொகையில் 1.4 பில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதனால் அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.