தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸால் ஒருவர் பாதிப்பு – மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா பிளஸ் வகையை சேர்ந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த ஒருவருக்கு இவ்வகையான தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ்
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி சற்றே மறைந்து வரக்கூடிய நிலையில், மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக புதிய வகை அதாவது உருமாறிய கொரோனா வைரஸின் டெல்டா பிளஸ் வகை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வகை வைரஸ் பலத்த உடலில் சேதத்தை ஏற்படுத்த கூடியதாகவும், அதிக வீரியம் மிக்கதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக மஹாராஷ்டிரா, கேரளாவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த டெல்டா பிளஸ் வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழலையர் பள்ளிகளை மூட முடிவு – கணக்கெடுப்பில் தகவல்!
அதாவது டெல்டா வகை கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்தால் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு, தென் ஆப்பிரிக்காவில் காணப்படும் பீட்டா வகை வைரஸின் மரபணுக்களை பெற்றுள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்திருந்தது. முக்கியமாக இந்த வகை வைரஸை எவ்வித தடுப்பூசிகளாலும் கட்டுப்படுத்த முடியாது எனும் சூழலில், இவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நோய் எதிர்ப்பு திறன் முற்றிலுமாக அளிக்கப்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய வகை வைரஸை அழிப்பது குறித்த ஆராய்ச்சிகளும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தான் புதிய வகை டெல்டா பிளஸ் வைரஸ் தமிழகத்தில் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இவற்றின் தாக்கம் இருப்பதாகவும், இவ்வைரஸால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.