ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து – உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

0
ஆம்னி பேருந்துகளின் உரிமம் ரத்து - உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து!

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் கட்டண விவகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்:

தமிழகத்தில் வெளியூர்களுக்கு செல்வதற்கு அரசு போதிய பேருந்து வசதிகளை செய்துள்ள நிலையிலும் பண்டிகைகள், தொடர் விடுமுறை நாட்களில் அதிக கூட்ட நெரிசலின் காரணமாக பொதுமக்கள் தனியார் பேருந்துகளை நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அரசு கட்டண நிர்ணயம் செய்துள்ள நிலையிலும் அதைவிட இரண்டு மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் அரசுக்கு புகார் அனுப்பிய போது ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

NLC இந்தியா Associate Advisor வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படாது என்றும் உரிமம் ரத்து செய்வது போன்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!