மீண்டும் வேகமெடுக்கும் ஓமைக்ரான் தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – WHO எச்சரிக்கை!
உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் நிலையில், இது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
WHO எச்சரிக்கை:
உலகம் முழுவதும் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் அதிக அளவில் பாதிப்புகளை ஏற்பாடு வருகிறது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதனை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் வேகமெடுக்கும் சமயங்களில் தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதன் மூலம் பாதிப்பின் தீவிரம் குறைக்கப்படுகிறது.
TNPSC முதல் UPSC தேர்வு வரை – படித்துக் கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..!
கொரோனா முதல் அலை, 2ம் அலைகளை தொடர்ந்து கடந்த மாதம் முதல் 3 ம் அலை மற்றும் கொரோனா வைரஸின் உருமாறிய ஓமைக்ரான் வகை தொற்று பாதிப்புகள் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வந்தது. உருமாறிய வகையினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவு தான் என்றாலும், பரவும் வேகம் அதிக அளவில் இருந்தது. இதனால் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை உலக நாடுகள் கடைபிடித்து வந்தது. தற்போது சமீப நாட்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – பிப்.22 கடைசி நாள்!
இது குறித்து உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள், 193 உலக நாடுகளில் வைரஸ் தாக்கம் முழுமையாக குறைந்து விட்டதாக நினைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி விட்டனர். ஆனால் பின்னர் வைரஸ் பாதிப்பு திடீரென்று அதிகரித்து வந்ததால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இது தவறான முறையாகும். வைரஸ் தாக்கத்தின் அளவை பொருத்து படிப்படியாகவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தாழ்த்துவது தான் பாதுகாப்பானது என்று உலக சுகாதார அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.