ஓமைக்ரான் பரவலால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளா? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

0
ஓமைக்ரான் பரவலால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளா? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!
ஓமைக்ரான் பரவலால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளா? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!
ஓமைக்ரான் பரவலால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளா? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

ஓமைக்ரான் வைரஸ் பரவல் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் ஓமைக்ரான் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் சில தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஓமைக்ரான் பரவல்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இது மிகவும் வேகமாக பரவக்கூடியது ஆனால் குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கர்நாடகா மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்காளம், ஹரியானா, சண்டிகர், காஷ்மீர், உத்தரபிரதேசம், கோவா, இமாசலபிரதேசம், லடாக், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் வேகமாக பரவி உள்ளது.

தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் ஆலோசனை!

அத்துடன் இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 780-ஆக உயர்ந்துள்ளது. அதனால் தொற்று உறுதி செய்யப்பட்ட மாநிலங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி மணிப்பூர், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்!

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அனைத்து இடங்களிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் மீண்டும் அனைத்து இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்தால் பொருளாதாரம் மிகவும் பாதிக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்தார். மேலும் அனைத்து இடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் கடந்த 2 ஆண்டுகளை போல பொருளாதாரம் மீண்டும் கடுமையாக பாதிக்கும் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!