ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீர்ரகள் நாடு திரும்பினர் – மத்திய அரசு கௌரவிப்பு!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், மத்திய அரசு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
இந்திய வீரர்கள்:
32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள காரணத்தால் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டில் தீவிர கட்டுப்பாடுகளுக்கு இடையில் போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டது. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. போட்டிகள் கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர்!
ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவரும் இன்று நமது நாட்டிற்கு திரும்பியுள்ளனர். தில்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு பொதுமக்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, லவ்லினா போா்கோஹெய்ன், ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், மகளின் ஹாக்கி அணி வீராங்கனைகள் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி மத்திய அரசு அவர்களை கௌரவித்தது.
TN Job “FB Group” Join Now
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, லவ்லினா போன்ற விளையாட்டு வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக போட்டிகளில் பங்கேற்றனர். அவர்கள் புதிய இந்தியாவின் புதிய நாயகர்கள். விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் விளையாட்டுத் துறை செய்து கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.