வேலூர் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட ஆட்சியர்!
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கூடுதல் தளர்வுகள் இன்றி வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியதால் கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் முன்னர் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இ- பதிவு செய்து மக்கள் வெளியில் சென்று வர அனுமதியும் வழங்கப்பட்டது. இந்த சலுகைகை மக்கள் முறையாக பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்திய காரணத்தால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க தொடங்கியது.
இந்தியாவில் கொரோனா 3ம் அலை தொடங்கி விட்டது – அலர்ட் ரிப்போர்ட்!
தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர் படிப்படியாக கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கியது. இருப்பினும் சில நாட்களாக மீண்டும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 2,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டு முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், மாவட்டங்களில் உள்ள பாதிப்பு நிலவரத்தை பொறுத்து மாவட்ட வாரியாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட கொரோனா ஊரடங்கு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 23 காலை 6 மணி வரை மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும். செவிலியர், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகள் வரும் 16 ம் தேதி முதல் செயல்படும். மாவட்டத்தில் கொரோனா 3ம் அலை பாதிக்க முடியாத அளவிற்கு தொற்றை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறிவித்துள்ளார்.