தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – மாநில செயலாளர் கோரிக்கை!
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி தமிழக அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி 2003ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி நிறைவுக்கு பின் மாதாந்திர ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. ஆனாலும் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை.
IPPB வங்கியில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஜனவரி 1 முதல் கூடுதல் கட்டணம் வசூல்!
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அமல்படுத்தப்படவில்லை.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச ரேஷன் திட்டம் மே 31 வரை நீட்டிப்பு!
நேற்று சேலம் மாவட்டத்தில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மண்டல கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய தமிழக அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜசேகர், அரசு ஊழியர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்துள்ள 10% தொகை அரசிடம் தான் உள்ளது. அந்த நிதியை வைத்து அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.