தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன் வைத்து பிரச்சாரம் செய்தது. அதில் பல வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே விரைவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வலுக்கும் ஆர்ப்பாட்டம்:
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. இருப்பினும், 2004ஆம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் எந்த பலனும் கிடைக்காது என்பதால் 19 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் பங்களிப்பு பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த போராடி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தற்போதைக்கு அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அரசு ஊழியர்களுக்கு, இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது 1.1.2022 முதல் அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
Data Entry பணிக்கு ரூ.31,000/- வரை ஊதியம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மேலும் சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வருவாய் கிராம ஊழியர், வனக்காவலர்கள், கிராமப்புற நூலகர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். இதையடுத்து 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளனர். எனவே விரைவில் தமிழக முதல்வர் இந்த கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.