பஞ்சாப் மாநிலத்தில் தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த 4 மாதத்திற்குள் அதற்கான பலனை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டில் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டதிலிருந்து தற்போது வரையிலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கையினை வைத்து வருகின்றனர். மேலும், தற்போது பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
Accenture ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இதனையடுத்து, பஞ்சாப் அரசும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த 2004 ஆம் ஆண்டிற்கு முன்னர் அரசு பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பலனை பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கான பலன்களை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்து 4 மாதங்களில் வழங்க வேண்டும் என பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.