6 முதல் 12ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – மாநில அரசு!
அசாம் மாநிலத்தில் இன்று முதல் 6 முதல் 12ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோவிட் -19 நெறிமுறைகளுடன் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்புகள் குறைந்து வருவதை முன்னிட்டு பல மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. தீவிர பாதிப்பு தொடர்ந்து இருக்கும் மாநிலங்களில் இன்னும் கல்வி நிலையங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை. கடந்த வாரம் முதல் தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகா மாநிலத்திலும் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திங்கள் கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தற்போது அசாம் மாநிலத்தில் ஞாயிற்று கிழமையான நேற்றைய நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 321 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 6 பேர் கொரோனா தொற்றின் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் மட்டும் 372 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர். மாநிலத்தில் இதுவரை மொத்தம் 5,91,980 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், கோவிட் -19 தொடர்பான மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்ததாக முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சுற்றுலா கிராமம், பிரம்மாண்ட ஸ்தூபி – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்!
அதன்படி, கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளுடன் இன்று 6 முதல் 12ம் வகுப்பு அஸ்ஸாம் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அரசின் நிலையான பாதுகாப்பு விதிமுறைகளின் படி வகுப்பறையில் 30 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வகுப்பறையில் சமூக தொலைதூர நடவடிக்கைகளை பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் திறந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.