தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பட்டாசு கடை:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடுவது வழக்கம். இந்த வெடி பொருளால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைந்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் கடந்த ஆண்டு பட்டாசு விற்பனை குறைந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் மக்கள் வெளியில் அதிகம் வராததால் பட்டாசு கடைக்காரர்கள் நஷ்டத்தை சந்தித்தனர். சிவகாசியில் பெரும்பாலான பட்டாசு கடைகள் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல் நடப்பு ஆண்டும் கொரோனா தொற்று பரவுவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மாமல்லபுரத்தில் சுற்றுலா கிராமம், பிரம்மாண்ட ஸ்தூபி – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்!
இந்த நிலையில் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்தி வெடிபொருள் சட்டத்தின் கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க உரிமம் பெற்று வருகின்றனர். பட்டாசு கடை அமைக்க விரும்புவோர் அனைத்து இ-சேவை மையங்கள் மூலமாக 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அதிர்ச்சி!
விண்ணப்பதாரர் தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் ஆவணங்கள் நடப்பு நிதி ஆண்டின் சொத்து வரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் எனில் வரி செலுத்திய ரசீது நகலுடன் இடத்தின் உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரை தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம், புகைப்படம் ஆகிவற்றை விண்ணப்பத்தின் போது பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் 30ம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.