மாமல்லபுரத்தில் சுற்றுலா கிராமம், பிரம்மாண்ட ஸ்தூபி – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்!

0
மாமல்லபுரத்தில் சுற்றுலா கிராமம், பிரம்மாண்ட ஸ்தூபி - தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்!
மாமல்லபுரத்தில் சுற்றுலா கிராமம், பிரம்மாண்ட ஸ்தூபி - தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்!
மாமல்லபுரத்தில் சுற்றுலா கிராமம், பிரம்மாண்ட ஸ்தூபி – தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்!

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் வகையில் சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்த்து மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக சட்டசபையில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மேம்பாடு:

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, விவாத கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அரசின் துறைகள் வாரியான மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் துறை வாரியாக அமைச்சர்கள் பல புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை தொடர்பான கொள்கை விளக்க குறிப்பை அமைச்சர் ஆர்.காந்தி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அதிர்ச்சி!

அதில் மத்திய அமைச்சகத்தின் ஜவுளித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கைவினைப் பொருட்கள் ஆணையம் சார்பில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம் என்ற திட்டத்தை ரூ.5.61 கோடி செலவில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் (பூம்புகார்) மூலம் அப்பகுதியிலுள்ள கைவினைஞர்கள் நலனுக்காகவும், சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியினை சுற்றியுள்ள கைவினை கலைஞர்களின் வசிப்பிடத்தை சீர்செய்யவும், அழகுபடுத்தி, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள கற்சிற்ப உற்பத்தி நிலையங்களை புதுப்பித்து, அங்கு வேலைபுரியும் கைவினைஞர்களுக்கு தேவையான வசதிகள் செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளை கவர புது திட்டம் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி – அமைச்சர் தகவல்!

மாமல்லபுரம் நுழைவாயில் பகுதியில் 40 அடி உயரத்தில் ஸ்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இந்த பணிகளுக்காக ரூ.1.80 கோடி பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. கைவினைஞர்களின் உற்பத்தி நிலையங்கள் புதுப்பிப்பு, குடியிருப்புகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணை கைவினை சுற்றுலா கிராமத்திற்கான முகப்பு பகுதி அழகுபடுத்தப்பட்டு வருகிறது. பூம்புகார் நிறுவனத்தின் முயற்சியால் மாமல்லபுரத்தை உலக கற்சிற்ப நகரம் என்று உலக கைத்திற குழுமம் அங்கீகரித்துள்ளது. மாமல்லபுரம் கைசிற்ப கலைக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய அங்கீகாரம் ஆகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!