உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி என்.வி ரமணா – இன்று பதவியேற்பு!!
நீதிபதி எஸ்.ஏ.போப்டே அவர்கள் நேற்று பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற நிலையில் நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா இன்று முதல் பதவியேற்றார்.
தலைமை நீதிபதி:
நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியான எஸ்.ஏ.போப்டே அவர்கள் நேற்று தனது பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் நாட்டின் உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா அவர்களுக்கு இன்று நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நிகழ்ச்சி ராஜபவனில் ஒரு சிறிய விழாவாக நடந்தது. நேற்று ஓய்வு பெற்ற நீதிபதியிடம் ரமணா அவர்கள், தற்போது கோவிட்-19 இரண்டால் அலையை எதிர்த்து போராடும் ஒரு சிக்கலான நிலையில் அனைவரும் உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பணி – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!!
வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் பலர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றின் சங்கிலியை தடை செய்வதற்கு கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவைப்படும். அனைவரும் ஒன்றாக இணைந்து போராடினால் கொரோனா தொற்றை தோற்கடிக்க முடியும் என்று அவர் கூறினார். நீதிபதி எஸ்.ஏ.போப்டேவின் பதவி காலத்தில், ஒரு நீதிபதி கூட உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 63 வயதான புதிய நீதிபதியான ராமணா அவர்கள் 2022 ஆக்ஸட் 26ம் தேதி வரை, ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்கள் நாட்டின் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார். நீதிபதி ரமணா அவர்கள், 40 வருட வாழ்க்கையில் ஆந்திராவின் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் மற்றும் சிவில், குற்றவியல், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் விஷயங்களில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்