தமிழகத்தில் பிப்.16ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அனுமதி!
தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்புகள் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் முன்னதாக மூடப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று பாதிப்புகள் குறைந்து வருவதால் அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அனுமதி:
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையின் போது அதிக அளவில் நோய் பரவல் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. உயிரிழப்புகள் வரலாறு காணாத வகையில் பதிவாகி வந்தது. நோய் தொற்றானது அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருந்ததால் அரசு தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறி வந்தனர்.
அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் – அகவிலைப்படி, சம்பள உயர்வு!
கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளில் அனைத்து கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்து வகுப்புகள் சுழற்சி முறையில் நடந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா 3ம் அலை பாதிப்புகள் டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்தது.
ஆதார் கார்டுடன், பான் எண்ணை இணைக்க முடியவில்லையா? முக்கிய காரணங்கள் இதோ!
இதனால் மூடப்பட்ட பள்ளிகள், கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சுழற்சி முறை இல்லாமல் வழக்கம் போல் வகுப்புக்களை தொடங்கியுள்ளது. ஆனால் கடந்த 2 வருடங்களாக நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்படவில்லை. கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ள ஊரடங்கை வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.