நவம்பர் 25 முதல் 7, 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!
கொரோனா 2ம் அலைப்பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் வரும் நவம்பர் 25ம் தேதி முதல் 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டுமாக திறக்கப்படும் என கோவா மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு
கோவா மாநிலத்தில் கொரோனா 2ம் அலை தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9 லிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரிடி கற்பித்தல் முறைகள் துவங்கின. இதை தொடர்ந்து பள்ளிகளை திறக்கும் நடவடிக்கையின் அடுத்தகட்டமாக, கோவா மாநில அரசு நவம்பர் 25ம் தேதி முதல் 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் கிலோ 150 ரூபாயை தொட்ட தக்காளியின் விலை – பதுக்கலை தடுக்க நடவடிக்கை!
இது தொடர்பான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) விரைவில் வெளியிடப்படும் என்று கோவா மாநில கல்வி இயக்குனர் பூஷன் சவைகர் மீடியா சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதாவது நவம்பர் 16ம் தேதியன்று நடைபெற்ற கோவா பணிக்குழு கூட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 22 முதல் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஆப்லைன் வகுப்புகளை தொடங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
2022ம் ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை – மாநில அரசு வெளியீடு!
இப்போது முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பணிக்குழு கூட்டம், 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன், மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமையை ஆய்வு செய்தது. . இதை தொடர்ந்து சமீபத்திய அறிவிப்பின் படி, வரும் நவ.25ம் தேதி முதல் 7, 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது, கொரோனா தொடர்பான அனைத்து வழிகாட்டுதல் நடைமுறைகளையும் பள்ளி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.