ஜூலை 16 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 16 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்திற்கு கூடுதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் சூழலில் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ஜூலை 16 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு மட்டுமே நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது முடக்கம் அமலில் இருக்கும் காலகட்டத்தில் சில அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு அரசு கூடுதல் நேர தளர்வுகளை அளித்துள்ளது.
மின்கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அந்த வகையில் பூரி, குர்தா, நாயகர், கட்டாக், பாலசூர், ஜஜ்பூர், மயூர்பஞ்ச், பத்ராக், ஜகத்சிங்க்பூர் மற்றும் கேந்திரபாதா உள்ளிட்ட பத்து கடலோர மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 மாவட்டங்களில், கடைகளை திறக்கும் நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் படி,
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பரில் தேர்வு!!
- மாநிலம் முழுவதும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்
- கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தொடர்ந்து மூடப்படிருக்க வேண்டும்
- சினிமா அரங்குகளை திறக்க அனுமதி இல்லை
- சமூக, மத அல்லது அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும்.
- திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கான கட்டுப்பாடுகள் நீடிக்கும்.
- மேலும் ஷாப்பிங் மால்கள், ஸ்பாக்கள் மற்றும் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
- 10 கடலோர மாவட்டங்களில், பஸ் போக்குவரத்துக்கு தடையும், வார இறுதியில் பணிநிறுத்தமும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.