தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பரில் தேர்வு!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர், அக்டோபரில் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு தனித்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும்,கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி என குறிப்பிட்டும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்யும் வழிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மொத்தம் 30 ஆயிரம் தனித்தேர்வர்கள் உள்ளனர். அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபரில் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓய்வு காலத்துக்கான சேமிப்புகள் – 6 புதிய திட்டங்கள் அறிமுகம்!
மேலும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் போதவில்லை என எண்ணும் மாணவர்களும் அந்த தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். ஆனால் அப்போதைய சூழலில் கொரோனா பரவல் குறைவாக இருந்து தளர்வுகள் இருந்தால் மட்டுமே இந்த தேர்வுகள் நடத்தப்படும் எனவும், அதற்கு முன்னதாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.