மின்கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று (ஜூன் 30) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின் கட்டணம் செலுத்த புதிய ரீசார்ஜ் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மின் கட்டணம்:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்கும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் இன்று (ஜூன் 30) மத்திய அமைச்சரவை கூட்டம் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டம் மிக முக்கியமானதாக காணப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பரில் தேர்வு!!
அதன்படி ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல் மின் கட்டணங்கள் செலுத்த ரீசார்ஜ் முறையை கொண்டு வரவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஓய்வு காலத்துக்கான சேமிப்புகள் – 6 புதிய திட்டங்கள் அறிமுகம்!
மேலும் நாட்டின் சில பகுதிகளில் புதிய மின் பாதைகள் மற்றும் புதிய துணை மின் நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களின் கிராமங்களை மின் பாதைகள் மூலம் இணைக்க ரூ.19,041 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.