‘நோபல் பரிசு’ பெற்ற மலாலா யூசுப்சாய்க்கு திடீர் திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

0
'நோபல் பரிசு' பெற்ற மலாலா யூசுப்சாய்க்கு திடீர் திருமணம் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
'நோபல் பரிசு' பெற்ற மலாலா யூசுப்சாய்க்கு திடீர் திருமணம் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
‘நோபல் பரிசு’ பெற்ற மலாலா யூசுப்சாய்க்கு திடீர் திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

பெண்களின் கல்விக்காக போராடி பல்வேறு இன்னல்களை சந்தித்து பின்னர் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற போராளி மலாலா யூசுப்சாய் தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்திருக்கிறார். எளிய முறையில் நடந்த இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

மலாலா யூசுப்சாய்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மலாலா யூசுப்சாய் கடந்த 2004ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த நோபல் பரிசை பெறுவதற்கு முன்பு மலாலா யூசுப்சாய் கடந்து வந்த வாழ்க்கை ஒரு இருள் நிறைந்த பாதையாகும். பாகிஸ்தானியரின் கட்டுப்பாடுகளை எதிர்த்து கல்வி கற்று வந்த 15 வயது சிறுமி மலாலா தாலிபான்களின் பிடி மற்றும் பெண்களின் மீதான அடக்கு முறை குறித்தும் எழுத்துக்கள் மூலமாக உலக மக்களுக்கு தெரிய வைத்தவர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதனால் கடந்த 2012ம் ஆண்டு தலிபான்களால் சுடப்பட்டு கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மலாலா. இந்த சம்பவத்துக்கு பிறகு மலாலாவின் குரல் ஐநா சபை வரை ஒலிக்க துவங்கியது. தொடர்ந்து 2013ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மலாலா பிறந்த தினத்தை குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி ‘மலாலா தினம்’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. குறிப்பாக மலாலா செய்த சேவையை பாராட்டி அவருக்கு 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் கொடுக்கப்பட்டது.

தற்போது பிரிட்டனில் தனது பெற்றோருடன் வசித்து வரும் மலாலா யூசுப்சாய், திருமண பந்தத்துக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இப்போது மலாலா திருமணம் செய்திருக்கும் அசார் மாலிக் என்பவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உயர் செயல்பாட்டு மைய பொது மேலாளர் என்று சொல்லப்படுகிறது. மலாலாவின் வீட்டில் எளிய முறையில் நடைபெற்றுள்ள இந்த திருமணம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று எனது வாழ்வின் பொன்னான நாள்.

Instagram பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் சந்தா வசதி அறிமுகம்! Followers அடிப்படையில் பணம்!

என்னுடைய வாழ்க்கையில் ஒரு பங்காக இருக்க அசாரும் நானும் திருமணம் செய்து கொண்டோம். இந்த திருமணம் எங்களது குடும்பத்தாரின் முன்னிலையில் பர்மிங்காமில் வைத்து நடைபெற்றது. எங்களுக்கு உங்களது ஆசீர்வாதம் தேவை. இந்த வாழ்க்கை பயணத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க போவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார். மலாலாவின் இந்த திருமண பதிவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!