சென்னை மின்சார ரயிலில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பிப்.22ம் தேதி இயங்காது!
தெற்கு ரயில்வே நிர்வாகத்தினர் தற்போது ரயில் பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் பிப்ரவரி 22ம் தேதி அன்று சில ரயில்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்கள் ரத்து:
தெற்கு ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், சிறிய அளவிலான பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்யும் பொருட்டு ரயில்வே நிர்வாகம் இந்த பராமரிப்பு பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறது. கொரோனா கால ஊரடங்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் இது போன்ற முக்கிய பணிகளை திட்டமிட்டு செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 22ம் தேதியான நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL லீக் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச 11 அணி! ரசிகர்கள் உற்சாகம்!
அதன்படி, சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதில், பிப்ரவரி 22ம் தேதி மின்சார கம்பி பொருத்தும் பணி நடைபெறவுள்ளது. இதனால், பிப்ரவரி 22ம் தேதி விஜயவாடா – சென்னை சென்ட்ரல்(12711) இடையே இயக்கப்படும் விரைவு ரயில் கூடூர் – சென்னை சென்ட்ரல் இடையேயும், சென்னை சென்ட்ரல் – விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் முதல் கூடூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இந்த 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
மேலும், மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 4:25 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி – மூர்மார்க்கெட் இடையே காலை 4:25 மணிக்கு இயக்கப்படும் ரயில், நெல்லூர் – சூலூர்பேட்டை இடையே காலை 10:15 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – நெல்லூர் இடையே காலை 7:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை- சென்னை மூர்மார்க்கெட் இடையே 12:35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட் – ஆவடி இடையே இரவு 9:15 மணிக்கு இயக்கப்படும் 6 ரயில்கள் 22ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளவர்கள் கவனத்தில் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.