தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’ – மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

0
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் 'கட்' - மாநகராட்சி நிர்வாகம் முடிவு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் 'கட்' - மாநகராட்சி நிர்வாகம் முடிவு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் ‘கட்’ – மாநகராட்சி நிர்வாகம் முடிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் மாநகராட்சி கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு இனி சம்பளம் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் முன்னதாக கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் இருந்தது. இதனால் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று நாக்பூர் மாநகராட்சி நேற்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, நாக்பூரின் சிவில் கார்ப்பரேஷனின் மருத்துவ மண்டல அதிகாரி டாக்டர் பாவ்னா சோன்குசரே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

இதேபோல், முன்னதாக தானே முனிசிபல் கார்ப்பரேஷன் கோவிட் -19 தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது. மேலும், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி சான்றிதழை அந்தந்த அலுவலகங்களில் சமர்ப்பிக்க நகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது. மாநிலத்திலேயே ஔரங்காபாத் மாவட்டம் தடுப்பூசி பாதுகாப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதற்காக, அங்கு சிறப்பாக பிரதமர் தலைமையில் நடத்தப்பட்ட குறைந்த தடுப்பூசிகள் உள்ள மாவட்டங்களின் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மதுரை காமராஜர் பல்கலைக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, ஔரங்காபாத் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 32,24,677 மக்களில், 64.36% பேர் முதல் டோஸையும், 27.78% பேர் இரண்டாவது டோஸையும் நவம்பர் 22 வரை பெற்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆட்டோரிக்‌ஷாவை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடர்பான அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!